Read all my poems
www.thottarayaswamy.net

3.யாரிடமும் சொல்லிவிடாதே

கடவுளிடம் மன்றாடி
வரமொன்று பெற்று
பெண்ணாய்
பூமிக்குவந்தது
மேகமொன்று..

எங்கெங்கோ வாழ்ந்து
புகழாரம் சூட்டிய
அழகோடு
என்னவள் வசிக்கும்
ஊருக்கு வந்தது..

வழியில்
அவளைகண்டபோது
அவளழகில் மயங்கி-
பின் நாணி
கடவுகளை அடைந்தது..

அவளை விட
அழகாய் மீண்டும்
தருவிக்க சொன்னது
மேகம்.

உலகில்
அவளுக்கு இணையாய்
இன்னொரித்தியை
பிரசுவிக்க முடியாது
இருந்தாலும்நீ
இரண்டாம் அழகி..

என்றாறம் கடவுள்.

தன் ஆசை விடுத்து
மீண்டும் மேகமானது
மேகம்..

இப்போதும்
நிறைவேராத
ஆசை எண்ணி
அழுது வடிக்கின்றது
கண்ணீரை
மழையாய்..

ஒரு மழைகால நேரத்தில்
என் காதோடு
சொல்லிச்சென்றது
மேகம்
யாரிடமும் சொல்லிவிடாதே
என்று.

No comments: