Read all my poems
www.thottarayaswamy.net

100. நூறாவது கவிதை

கல்லரை முன்
கண்ணீர் சிந்தி

கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே

உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்

நான்!

99.உள்ளங்கை

உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு

முற்றத்தில் சொட்டியது
அந்திமழை

98.வலி

உதிர்ந்தது பூ

வலியில் துடித்தாய்
நீ!

97பனிச்சிலை

சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!

மனசெல்லாம்
நீ!

96.கருவறை

என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி

காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்

உன்னை பிரசுவிக்க!

95.தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி

நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி

நீ
என்ன முரண்களின்
மகளா!

94.தோசம்!

என் உதடு யாத்திரீகன்கள்
உன் செவ்விதழை சுவைத்தபோதே
பிடித்துவிட்டது எனக்கு

செவ்வாய் தோசம்!

93.போட்டி

காட்சிப்பிழைகளில் கூட
உந்தன் இன்னொரு
பிம்பத்தை ஏற்க மறுக்கின்றது
என் கண்கள்.

உனக்குப் போட்டியாக
இன்னொருத்தி இருப்பதாக
நினைத்து.

92. தேள்

சினேகிதா!
தேளை தொட்டுப்பர்த்ததற்கா
இப்படி கூச்சலிடுகிறாயே

உன்னிடமுள்ள என்னுயிரை
அவ்வளவு எளிதாக தேளிடம்
தந்துவிடுவாயா என்ன.

91.வெண்நிலா விற்பனைக்கு

வெண்நிலாக்கள் என்று
விற்பனை செய்துகொண்டிறுகிறேன்

நீ
ஒட்டி எரிந்த
ஸ்டிக்கர் பொட்டுக்களை.

60(1) கனாக்கால கவிதைகள்

அனைத்துக் கனாக்கால கவிதைகளையும் படிக்கவழிவகை செய்த பதிவு . முதல் 60 கவிதைகள் மட்டும்.


தட்டுங்கள்